அவியல்

தேவையானவை:

முருங்கைக்காய் – 2

கத்தரிக்காய் – 4

தக்காளி – 2

சேனைக்கிழங்கு – 50 g

உருளை -1

கேரட் – 1

வாழைக்காய் – 1

அவரைக்காய் – 6

மாங்காய் – பாதி

பச்சை மிளகாய் – 4

சி.வெங்காயம் – 10

சீரகம் – 1 ஸ்பூன்

தேங்காய் அரை மூடி

தயிர் – 1 ஸ்பூன்

தாளிக்க தேங்காய் எண்ணெய் – 50ml

உப்பு தேவையானது

செய்முறை:
காய்கள் அனைத்தையும் வெட்டி வைக்கவும். பச்சை மிளகாய், சீரகம், சின்ன வெங்காயத்தை மிக்ஸியில போட்டு அரைத்து காயில் போட்டு உப்பு போட்டு வேக வைக்கவும். 10 நிமிடம் வெந்த பின்பு தேங்காயை அரைத்து ஊற்றவும். 5 நிமிடம் கழித்து தயிரை ஊற்றிப் பின்பு தேங்காய் எண்ணெய் ஊற்றித் தாளிக்கவும். மஞ்சள் தூள் போடக்கூடாது.
ரசம் சோறுக்கு ருசியாக இருக்கும். அடை அவியல் நன்கு இருக்கும். எல்லா காய்களும் சேர்வதால் சத்துக்கிடைக்கும்.

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை:
து- பருப்பு – 150g – ஊற வைக்கவும்

சின்ன வெங்காயம் – 15

கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது

தேங்காய் மூடி – 1

பூடு – 5 பல்

புளி – 50g

மிளகாய் பொடி 1 ஸ்பூன்

மல்லிப் பொடி – ஒன்றரை ஸ்பூன்

தாளிக்க 50m – ந-எண்ணெய்

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் பொடி – சிறிது

மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன் (மூன்றும் சேர்ந்து)

தக்காளி – 2,

பச்சை மிளகாய் – 2


செய்முறை:


முதலில் பருப்பை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். அதனுடன் சி- வெங்காயம், மல்லி,கறிவேப்பிலை – 1 -ப- மிளகாயை பொடியாக நறுக்கிப் போடவும். பூடை பொடியாக நறுக்கிப் போடவும், தேங்காய் இரண்டு சில்லை சிறு சிறு துண்டாக நறுக்கிப் போட்டு உப்புப் போட்டு சிறு சிறு உருண்டைகளாகப் போடவும். இட்லிச்சட்டியில் நீர் ஊற்றிய பிறகு இட்டிலி தட்டில் சிறிது எண்ணெய் தடவிய பிறகு உருண்டைகளை வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.


பின்பு புளிக்குழம்பு வைப்பது போல் வாணலியில் வைக்கவும். தக்காளி, கறிவேப்பிலை தாளித்து புளியைக் கரைத்து ஊற்றி உப்பு போட்டு, மிளகாய் பொடி, மல்லிப் பொடி போட்டு கொதிக்க விடவும். தேங்காய் அரைத்து ஊற்றிக் கொதிக்க விடவும். அடுப்பை Sim – ல் வைத்து அவித்த உருண்டைகளை மெதுவாக குழம்பில் போடவும். 5 நிமிடம் Sim – ல் இருக்கட்டும். குழம்பு Super – ஆக இருக்கும. தொட்டுக்க உருண்டைகளே போதுமானது.


து- பருப்புக்குப் பதில் கடலை பருப்பிலும் செய்யலாம் – ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவைக் கூட்டலாம் – குறைக்கலாம்.

ரவா லட்டு

தேவையானவை:

ரவை – கால் கிலோ

ஜீனி- 150 கி

நெய் 100 மிலி

ஏலக்காய் – 4

வறுத்து உடைத்த முந்திரி தேவையானவை

பால் – 1/4 கப்

செய்முறை:


ஜீனியை ஒரு அகலப் பாத்திரத்தில் போட்டு கால் டம்ளர் காய்ச்சி ஆறிய பாலை ஜீனியில் ஊற்றி நல்லா கரைய வைக்க கலக்க வேண்டும். ரவையை நெய் ஊற்றி நன்கு வறுக்க வேண்டும். ஏலக்காய் தூளையும், வறுத்த முந்திரியையும் ஜீனிக் கலவையில் போட வேண்டும். வறுத்த ரவையை ஜீனிக் கலவையில் சூட்டுடன் போட்டு கரண்டியை வைத்து கிளறி சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். 5 நிமிடம் கழித்து சுவையாக சாப்பிடலாம்.

ஜீனி பாகு காய்ச்சத் தேவையில்லை.

நன்றி.

கானம் ( கொள்ளு ரசம்)

தேவையானவை:

கானப் பயறு – 100g

மிளகு, சீரகம் – 1 ஸ்பூன்

பூடு – 10 பல்

உப்பு

தக்காளி – 1

புளி – 25g

மிளகாய வற்றல் – 2

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
கானப் பயரை அவித்து 3 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அந்த நீரில் புளி, உப்பு, தக்காளியைப் போட்டு ரசத்திற்கு போல் பிசைந்து வைக்கவும். மிளகு, சீரகம், பூடு, வற்றல், கறிவேப்பிலையை ரசத்திற்கு நுணுக்குவது போல் நுணுக்கி நாம் ரசம் தாளிப்பது போல் தாளித்து அந்தக் கரைத்து வைத்த நீரை ஊற்றிய பிறகு ரசத்தைக் கொதிக்க வைப்பது போல ஒரு கொதி வந்ததும் சிறிது குளிர்ந்த நீரை தெளித்து அடுப்பை அணைத்து விட்டு சுடு சோறில் ஊற்றி ருசியாக சாப்பிடலாம், தொடு கறியுடன்.

பயன்: கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

“கொழுத்தவனுக்குக் கொள்ளும், இளைத்தவனுக்கு எள்ளும் கொடு” என்பது பழமொழி…

பீட்ரூட் அல்வா

தேவையானவை:


பீட்ரூட் – கால் கிலோ

ஜீனி – 200g

நெய் 100ml

முந்திரி பருப்பு – 10 வறுத்தது

ஏலக்காய் – 5

செய்முறை:

முதலில் பீட்ருட்டைத் துருவலாக துருவி எடுக்கவும். நெய்யை ஊற்றி பீட்ரூட்டை நெய்யில நன்கு வதக்கவும். பின்பு சீனியுடன் சிறிது நீரைச் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் ஏலக்காய், முந்திரியையும் போட்டு கிளறவும். அதில் பீட்ரூட்டையும் போட்டு கிளறவும். 7 நிமிடம் Simல் வைத்து கிளறினால் அல்வா பதம் வந்துவிடும். ஆறிய பின்பு சாப்பிடலாம்.


பயன் – பீட்ரூட் HB கூடும்.

நிலக்கடலைச் சட்னி

தேவையானவை:

நிலக்கடலை வறுத்து தோல் நீக்கியது 100g

மிளகாய் வற்றல் – 5

தேங்காய் அரை மூடி திருகியது

உப்பு தேவையான அளவு

புளி சிறிது

தாளிக்க சிறிது எண்ணெய்

சிறிது கடுகு

சின்ன வெங்காயம் 4 வெட்டியது

கறிவேப்பிலை சிறிது

செய்முறை:
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை, தேங்காய், மிளகாய் வற்றல், உப்பு, புளி இவையனைத்தையும் மிக்ஸியில் அரைத்து சட்னி பதம் வந்தவுடன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, இட்லி தோசைக்குத் தொட்டுச் சாப்பிடலாம் – ருசியாக இருக்கும்.
பயன் – நிலக்கடலை ஆரோக்கியம் தரும் உணவு.

கேழ்வரகு தோசை

தேவையானவை:
கேப்பை மாவு – 4 கப்

உளுந்து – 1 கப் (நான்குக்கு ஒன்று அளவு)

உப்பு

வெந்தயம் – 1 Spoon

செய்முறை:
உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஊற வைத்து கிரைண்டரில் தோசைக்கு ஆட்டுவது போல ஆட்டி எடுத்து விட்டு அந்த கேப்பை மாவும் உப்பும் சேர்த்து முதல் நாள் மாலை பிசைந்து வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அது தோசை மாவு மாதிரி இருக்கும்.தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி தோசை வார்த்துச் சாப்பிடலாம். அவரவர்க்குப் பிடித்த சட்னியைத் தொட்டுச் சாப்பிடலாம்.

பயன் – சிறு தானியங்கள் உடல் நலத்திற்கு நல்லது.

முந்திரி பர்பி

தேவையானவை:
முந்திரி பருப்பு – 200g

சீனி – 150g

நெய் – 100g

ஏலக்கரய் – 5

செய்முறை:


முந்திரி பருப்பை ஒரு அரை மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்பு மிக்ஸியில் ஏலக்காயுடன் ஊறிய முந்திரியை நீர் ஊற்றாமல் அரைத்து எடுக்கவும். வாணலியில் சீனியைப் போட்டு சிறிது நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.அதில் அரைத்த முந்திரி, நெய் போட்டு Simல் கிளறவும். கிளறல் நன்கு பர்பி பதத்திற்கு வரும் பொழுது டிரேயில் நெய் தடவவும். வாணலியில் உள்ள பர்பி பதம் வந்து வாணலியில் ஒட்டாமல் வரும். பிறகு டிரேயில் கொட்டியதும் சூட்டுடனே சிறு சிறு துண்டுகளாக வெட்டி விடவும். ஆறியதும் பறிமாறலாம். இதைத் தான் கடைகளில் காஜு Sweets என விற்கிறார்கள் வெவ்வேறு வடிவங்களுடன் ருசியாக இருக்கும். முயலுங்களேன்!!!


பயன் – விலை மலிவானது கடையை விட.

சிக்கன் கோலா

தேவையானவை:
சிக்கன் கொத்து கறி – 100g

இஞ்சி பூடு விழுது – சிறிது

மிளகு, சீரகம், பெருஞ்சீரகம்-1 Spoon

சின்ன வெங்காயம் 10 உரித்தது

பொறி கடலை- 50 g

உப்பு தேவையானது

ப.மிளகாய் – 1

சிறிது மல்லி இலை

கறிவேப்பிலை – சிறிது

கோலாபொறிக்க எண்ணெய் தேவையானது

செய்முறை:
கொத்து கறி , இஞ்சி, பூடு, மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், சி வெங்காயம், மிளகாய் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். உப்பு, மஞ்சள் தூளையும் போட்டு அரைக்கவும். 50g பொட்டுக்கடலையும் சேர்த்து அரைத்து எடுக்கவும். நீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் சேர்த்து நல்லா பிசைந்து எடுத்து வைத்த பிறகு, தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சிறு, சிறுவடைகளாய் தட்டவும், அல்லது வாணலியில் சிறு சிறு கோலா உருண்டைகளாகப் போட்டு வேக வைத்துப் பொன்னிறம் வந்ததும் எடுத்துச் சாப்பிடலாம்.

தேவைப்பட்டால் சோள மாவு/உருளை அவித்ததை அரைத்த கறியுடன் சேர்த்துப் பிசைந்து சுட்டு சாப்பிடலாம்.

மொறுமொறு தோசை

தேவையானவை:

புழுங்கல் அரிசி – 2 கப்

பச்சரிசி – 2 கப்

உளுந்தம் பருப்பு – 1 கப்

ஒன்னரை டீஸ்பூன் வெந்தயம்

உப்பு

செய்முறை:

அரிசி, உளுந்தை தனித்தனியாக ஊற வைத்து தோசை மாவு பதத்தில் உப்பு போட்டு அரைத்து வைத்து மறுநாள் தோசைக்கல்லை அடுப்பில் குறைந்த சூட்டில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றலாம் அல்லது நெய் ஊற்றி மொறு மொறு தோசை வார்க்கலாம்.